வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ரூ.3.38 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்த காவல் துறையினர் அதை கடத்திய ஒருவரை கைது செய்துள்ளனர்.
லவாங்டலாய் மாவட்டத்தின் துயிசாங் பாலத்தின் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படைகளான அசாம் ரைபில்ஸ் மற்றும் மிசோரம் காவல் படையினர் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 260 டப்பாக்கள் அளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதை கடத்தி வந்த சம்பாய் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த சிகரெட்டுகள் அனைத்தும் மியான்மர் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தும் அம்மாவட்டத்தின் ஹனஹ்தியல் காவல் துறையினரிடம் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகாக ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, மிசோரம் மாநிலத்தின் 6 மாவட்டங்கள் மியான்மர் நாட்டின் சின் மாநிலத்துடன் சுமார் 510 கி.மீ. நீளத்திற்கு எல்லையை பகிர்ந்துள்ளது. இதனால், மியான்மரில் இருந்து போதைப் பொருள்களும், ஆயுதங்களும் அம்மாநிலத்தினுள் எளிதாக கடத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.36.17 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

