சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகள் முடக்கம்!

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 1.26 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.

News image

அமலாக்கத்துறை - (கோப்பு படம்)

Updated On :23 ஜனவரி 2025, 7:44 pm IST

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 1.26 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் எக்ஸ் தளப் பதிவில், “சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட தமிழக மீன்வளம் - மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை, தூத்துக்குடி, மதுரையில் உள்ள ரூ. 1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளைச் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2002-2006-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4 கோடியே 90 லட்சம் சொத்து சோ்த்ததாக, 2006-ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்தது.

இது தொடா்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

மேலும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் 7 பேருக்கும் சம்மன் அனுப்பியதுடன், சொத்துகளையும் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.