/

7 ஆம் வகுப்பு மாணவன் பலி! ஆசிரியர் கைது!

அசாமில் ஆசிரியர் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியானதைப் பற்றி..

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜனவரி 2025, 7:23 pm IST

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆசிரியர் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான்.

சோனிட்பூர் மாவட்டத்தின் சிராஜுலி பகுதிலுள்ள தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் கடந்த ஜன.22 அன்று அமன் குமார் என்ற 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனுடன் வகுப்பறையில் சண்டையிட்டுள்ளார்ன். அதற்கு அந்த மாணவர்களின் ஆசிரியர் ஒருவர் இரு மாணவர்களையும் அடித்து தண்டனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர், அன்று மாலை வீடுத்திரும்பிய அமானுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அமானை அவனது குடும்பத்தினர் டெஸ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.23) அமான் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது அசாம் காவல் துறையினரிடம் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அந்த விசாரணையில் ஆசிரியர் அமானின் நெஞ்சு உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்கியதாக நேரில் கண்ட மாணவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அந்த ஆசிரியர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென அப்பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 15 மறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.