நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!

ராஜஸ்தானில் இளம் தம்பதி சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜனவரி 2025, 9:42 pm IST

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் தம்பதியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.

ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ஆஷா மீனா (25) மற்றும் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜன.24) காலை ஆஷாவின் தொழிற்சாலையில் பணிப்புரியும் மோனு என்பவர் அவர்களது வீட்டிற்கு ராஜாராம் மற்றும் ஆஷாவுடன் பேச வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு இருவரையும் மிகவும் நெருக்கத்திலிருந்து சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த தாக்குதலில் இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி மகாத்மா காந்தி அர்சு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து, காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு, தப்பியோடிய கொலையாளி மோனுவை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்த கொலைச் சம்பவம் நடந்தபோது ராஜாராமின் சகோதரி அதே வீட்டில் அவர்களுடன் தான் இருந்தார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.