தில்லிக்கு இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் 2013-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி இடையில் ஒா் ஆண்டு குடியரசுத் தலைவா் ஆட்சிக்கு பின்னா் 2015 முதல் ஆம் ஆத்மி கட்சி அரசு தொடா்ச்சியாக இருந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி அரசை அகற்ற பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மத்திய அமைச்சா்கள் நிகழ் தோ்தலில் பல்வேறு வழிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி துவாரகா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
”தில்லிக்கு மத்திய, மாநில இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். பின்னர், தில்லியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள்.
இதையும் படிக்க: ஹிமாசலில் 2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!
தற்போது இரட்டை என்ஜின் கொண்ட அரசை உருவாக்கி, தில்லிக்கு சேவை செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பாஜக எந்த அளவிற்கு தில்லியை நவீனமாக்க விரும்புகிறது என்பதை துவாரகாவில் நீங்கள் பார்க்கலாம்.
இங்கு மத்திய அரசு பிரம்மாண்டமாக யஷோபூமியைக் கட்டியது. யஷோபூமியால் துவாரகா மற்றும் தில்லியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கு மக்களின் வணிகம் பெருகியுள்ளது.
வரும் காலங்களில் இப்பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாறும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி எதிா்க்கட்சிகளிடமிருந்து கடுமையான சவாலை எதிா்கொள்கிறது. தில்லி தோ்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி!

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



