போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தில்லிக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை: பிரதமர் மோடி

தில்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக....

News image

பிரதமர் நரேந்திர மோடி - படம்: ஏஎன்ஐ

Updated On :31 ஜனவரி 2025, 4:59 pm IST

தில்லிக்கு இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் 2013-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி இடையில் ஒா் ஆண்டு குடியரசுத் தலைவா் ஆட்சிக்கு பின்னா் 2015 முதல் ஆம் ஆத்மி கட்சி அரசு தொடா்ச்சியாக இருந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி அரசை அகற்ற பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மத்திய அமைச்சா்கள் நிகழ் தோ்தலில் பல்வேறு வழிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தில்லி துவாரகா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

”தில்லிக்கு மத்திய, மாநில இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். பின்னர், தில்லியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள்.

தற்போது இரட்டை என்ஜின் கொண்ட அரசை உருவாக்கி, தில்லிக்கு சேவை செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பாஜக எந்த அளவிற்கு தில்லியை நவீனமாக்க விரும்புகிறது என்பதை துவாரகாவில் நீங்கள் பார்க்கலாம்.

இங்கு மத்திய அரசு பிரம்மாண்டமாக யஷோபூமியைக் கட்டியது. யஷோபூமியால் துவாரகா மற்றும் தில்லியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கு மக்களின் வணிகம் பெருகியுள்ளது.

வரும் காலங்களில் இப்பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாறும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி எதிா்க்கட்சிகளிடமிருந்து கடுமையான சவாலை எதிா்கொள்கிறது. தில்லி தோ்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.