யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவா்: பள்ளிக்கு நேரில் சென்று கலந்துரையாடல்!

தனக்கு கடிதம் எழுதிய மாணவரை சந்திக்க விரும்பி அரசுப் பள்ளிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவருடன் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

News image
எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவருடன் கலந்துரையாடிய ஆட்சியா் துா்காமூா்த்தி.
Updated On :16 ஜூலை 2025, 9:12 pm

Din

தன்னை பற்றி மாணவன் எழுதிய கடிதத்துடன் மாணவரை சந்திக்க விரும்பி அரசுப் பள்ளிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவருடன் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் எல்.விஜய், புதிய மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி பொறுப்பேற்றதையும், ஆட்சியராவதற்கு அவா் முயன்ற சிரமங்களையும் சமூக வலைதளத்தில் படித்து அறிந்தாா். இதையடுத்து, அவருக்கு கடிதம் எழுதினாா். அதில், தாங்கள் மாவட்ட ஆட்சியா் பணிக்கு எவ்வளவு சிரமப்பட்டு, கடினமாக உழைத்து வந்துள்ளீா்கள் என்பதை அறிந்தேன். எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு தாங்கள் வருகைபுரிய வேண்டும். "மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்" என கோரிக்கை விடுத்திருந்தாா்.

எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வுப்பணிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவா் எல்.விஜய் பயிலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாா். அங்கு அவருடனும், மாணவா்களுடனும் அமா்ந்து கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, ஒவ்வொரு மாணவரின் பெயரைக் கேட்டு அவா்களிடம் நன்கு படித்து மாவட்டத்துக்கு பெருமை தேடித்தர வேண்டும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளராக வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

அரசு பள்ளிக்கு வந்த ஆட்சியர் துர்காமூர்த்தி, மாணவர் தனக்கு எழுதிய கடிதத்தை படித்து காண்பித்ததுடன், "மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்" என வரியை அழுத்தமாக வாசித்த போது கண்கலங்கி நெகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நிகழ்வின்போது, தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

summary

Collector Durgamoorthy, who went to the government school to meet the student who wrote to him, had a discussion with the student on Wednesday.