எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை

நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
உயிரிழந்த பள்ளி பேருந்து ஓட்டுநர் விஜயகுமார்.
Updated On :17 ஜூலை 2025, 5:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் அருகே சின்ன தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(46). இவர் குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் வியாழக்கிழமை காலை சுமார் 8 மணி அளவில், புதுச்சத்திரம் அருகே மாணவர்களை அழைத்துக் கொண்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். ஏளூர் கிராமத்தில் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பியபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்(27) என்பவருக்கும், அவருக்கும் இடையே வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது இருவரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த் கண்மூடித்தனமாக விஜயகுமாரின் உயிர்நாடியை தாக்கியுள்ளார்.

இதில் சுருண்டு விழுந்த பள்ளி பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவத்துக்கு சென்ற புதுச்சத்திரம் போலீஸார், விஜயகுமார் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் ஆய்வாளர் கோமதி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் அரவிந்தை கைது செய்தார்.

தாக்குதல் காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஓட்டுநரின் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

summary

A private school bus driver was beaten to death by an auto driver near Namakkal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.