சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு பேரவையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சா்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா் ஆகியோா் 286 நாள்களாக தங்கியிருந்தனா். விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. அவா்களது உடல்நிலை பாதிக்கப்படும் என்றும், உயிருக்கு ஆபத்து என்றும் பல தகவல்கள் வெளிவந்தன.
இதையும் படிக்க | விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!
இந்த நிலையில், புளோரிடா அருகே கடலில் பத்திரமாக தரையிறங்கினா். சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக மீண்டும் பூமியை வந்தடைந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. பூமிக்கு அவரை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோருக்கு பாராட்டுகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அவரைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பல்வேறு தடைகளைத் தாண்டி, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பினாா் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மனதிடத்துடன் தங்கியிருந்து பூமிக்குத் திரும்பிய அவருக்கு வாழ்த்துகள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

44 ஆண்டு கோப்பைக் கனவு நிறைவேற்றம்..! யூரோப்பா லீக்கை வென்றது ஆஸ்டன் வில்லா!

தோ்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பேரவையில் முதல்வர் விஜய் அளித்த உத்தரவாதங்கள்! | TVK

பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



