ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு.

Published On :

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு பேரவையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா் ஆகியோா் 286 நாள்களாக தங்கியிருந்தனா். விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. அவா்களது உடல்நிலை பாதிக்கப்படும் என்றும், உயிருக்கு ஆபத்து என்றும் பல தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், புளோரிடா அருகே கடலில் பத்திரமாக தரையிறங்கினா். சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக மீண்டும் பூமியை வந்தடைந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. பூமிக்கு அவரை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோருக்கு பாராட்டுகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

அவரைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பல்வேறு தடைகளைத் தாண்டி, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பினாா் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மனதிடத்துடன் தங்கியிருந்து பூமிக்குத் திரும்பிய அவருக்கு வாழ்த்துகள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.