மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நக்சல்கள் பதுங்குமிடங்களில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் பதுங்குமிடங்களிலிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :19 மார்ச் 2025, 1:45 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களின் பதுங்குமிடங்களிலிருந்து வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சுக்மாவின் தண்டேஷ்புரம் கிராமத்தின் மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மாவட்ட பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று (மார்ச் 18) மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவோயிஸ்டுகளின் பதுங்குமிடத்திலிருந்து 55 ஜெலாட்டின் குச்சிகள், ஒரு பேரேல் கிரனேட் லாஞ்சர் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் அவர்களது முகாமுக்கு இன்று (மார்ச் 19) கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினரை தாக்கும் நோக்கத்துடன் இந்த ஆயுதங்களை நக்சல்கள் பதுக்கி வைத்திருந்தாகவும், தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.