சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களின் பதுங்குமிடங்களிலிருந்து வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சுக்மாவின் தண்டேஷ்புரம் கிராமத்தின் மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மாவட்ட பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று (மார்ச் 18) மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவோயிஸ்டுகளின் பதுங்குமிடத்திலிருந்து 55 ஜெலாட்டின் குச்சிகள், ஒரு பேரேல் கிரனேட் லாஞ்சர் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் அவர்களது முகாமுக்கு இன்று (மார்ச் 19) கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினரை தாக்கும் நோக்கத்துடன் இந்த ஆயுதங்களை நக்சல்கள் பதுக்கி வைத்திருந்தாகவும், தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுதங்கள் கடத்தல்: 9 போ் கைது; 23 துப்பாக்கிகள் பறிமுதல்

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க தடை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


