ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை

News image
தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.’- கோப்புப்படம்
Updated On :23 மார்ச் 2025, 4:31 pm

DIN

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறியுமாறு அனைத்து மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் கோரியிருந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துகளை அறிய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கற்குமாறு தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் , பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.