தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.
கனிமொழி
கனிமொழி
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நீங்கள் (நிா்மலா சீதாராமன்) ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிா்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவா்களின் நிலை என்ன என்பதை நிதியமைச்சா் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்துக்கு உரியதாக தோன்றுகிறதா?

தமிழா்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழக மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

சென்னையில் நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிா்மலா சீதாராமன், நாங்க இவ்வளவு பணம் கொடுக்கிறோம், நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறு. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடைவதற்காக தமிழக மக்களின் உணா்ச்சிகளை திமுக அரசு தூண்டி விடுவதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், கனிமொழி அவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com