ஆம்பூர்: ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வியாழக்கிழமை திடீரென பலத்த வெடி சப்தம் கேட்டதால், கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னவரிகம், வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வன்னிநாதபுரம், கரும்பூர், குமாரமங்கலம், வடச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் வியாழக்கிழமை காலை சுமார் 11 மணிக்கு திடீரென பலத்த வெடி சப்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். திடீரென கேட்ட வெடி சப்தத்தால் மக்கள் அச்சமடைந்தனா். நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, தங்களுக்கும் வெடி சப்தம் கேட்டதாகவும், இது குறித்து உரிய துறை அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் உறுதியான பிறகே முழு விவரம் தெரிய வரும் என அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

போதைப் பொருள் விற்பனை தடுக்க கோரிக்கை

சத்தியமங்கலத்தில் கனமழை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


