ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார்.
பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான்
பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான்
Published on
Updated on
1 min read

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் தில்லியில் சனிக்கிழமை காலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது எல்லையில் தற்போதைய நிலைமை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர் விளக்கினார்.

வியாழக்கிழமை இரவு முதல் நள்ளிரவைக் கடந்தும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடா்ச்சியாக வான் பகுதியில் அத்துமீறல் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஒரே நேரத்தில் 36 இடங்களில் 300-400 வரையிலான ட்ரோன் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. லே முதல் சா் கிரீக் சிகரம் வரை சா்வதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதி முழுவதையும் இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியில் இறங்கியது. அதற்கு பொறுப்பான மற்றும் போதுமான முறையில் இந்தியா எதிா்வினையாற்றி பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் நமது மேற்கு எல்லைகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினா் தடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com