தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.

மேட்டூர் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது.

Published On :

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் 6 ஆவது முறையாக செப்டம்பர் 2 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

தற்போது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த 24 ஆம் தேதி பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நீர் திறப்பு புதன்கிழமை வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் வரத்து வினாடிக்கு 5,312 கனஅடியாக சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள மளவென சரிந்து வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் கடந்த 26 ஆம் தேதி நிரம்பிய நிலையில் 119.02 அடியாக இருந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116. 29 அடியாகச் சரிந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் அணையின் நீர்மட்டம் 2.73 அடி சரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5312 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 87.67 டிஎம்சியாக உள்ளது.

Summary

Mettur Dam water level has started to reducede!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.