பொருளாதார ஆய்வறிக்கை ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது: ஆனந்த் மஹிந்திரா

பொருளாதார ஆய்வறிக்கை குறித்து ஆனந்த் மஹிந்திரா கூறியது...
 ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா
Updated on
2 min read

புது தில்லி: 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, நகரங்களை நிர்வாக ரீதியான பின்தங்கிய அம்சங்களாகக் கருதாமல், நாட்டின் பொருளாதார உத்தியின் மையத்தில் வைப்பதன் மூலம் இந்தியாவின் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது என்று தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்க பதிவில் கூறியிருப்பதாவது: "இந்த பொருளாதார ஆய்வறிக்கை, எதிர்காலத்திற்கான ஒரு துணிச்சலான, நம்பிக்கையான பார்வையையும், பொருளாதாரத்தின் பலவீனங்கள் குறித்த யதார்த்தமான மதிப்பீட்டையும் இணைப்பதன் மூலம் ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது".

இருப்பினும், பொருளாதாரக் கொள்கை விவாதங்களில் அரிதாகவே தீவிர கவனம் பெற்ற ஒரு விஷயமாக, இந்திய நகரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுத் தேவையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மையான உந்துசக்தியாகத் திகழ்கிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் நிலவும் வலுவான நுகர்வோர் தேவை, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வரிச் சீரமைப்பு நடவடிக்கைகள் நகர்ப்பற நுகர்வில் முன்னேற்றத்துக்கு பங்களித்துள்ளது.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு இந்திய நகரமும் 20 ஆண்டு கால நகர இடஞ்சார் மற்றும் பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும், அது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

பொருளாதார ஆய்வறிக்கை மேலும் கூறுகையில், "தேசிய பொருளாதாக வளர்ச்சிக்கு நமது நகரங்களின் பங்கிற்கு ஏற்ற நிறுவன, நிதி மற்றும் திட்டமிடல் அடித்தளங்கள் அவற்றுக்கு வழங்கப்படவில்லை. நகரமயமாக்கல் உற்பத்தித்திறன், புத்தாக்கம் மற்றும் தொழிலாளர் சந்தைகளை நமது நகரங்களில் குவித்துள்ளது. ஆனால் அது நெரிசல், முறைசாரா தன்மை மற்றும் நிர்வாகத்தின் சிக்கல்களையும் குவித்துள்ளது".

இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று பொருளாதார ஆய்வறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது விநியோகப் பக்கத்தில், தெளிவான உரிமைப் பத்திரங்கள், மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து சார்ந்த மேம்பாடு ஆகியவற்றின் மூலம் நகர்ப்புற நிலங்களைத் திறப்பது, மலிவு விலை வீடுகளை விரிவுபடுத்தி, புறநகர்ப் பரவலைக் குறைக்கும்.

மேலும், போக்குவரத்துத் துறையில், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் தேவை மேலாண்மை மூலம் வாகனங்களை விட மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது, வாழும் தரத்தை மேம்படுத்துவதோடு உற்பத்தித்திறனையும் உயர்த்தும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

வீட்டுவசதி பற்றாக்குறை, நெரிசல் அல்லது நலத்திட்ட விநியோகம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விவாதிக்கப்படாமல், ஒருவேளை முதல் முறையாக, நகரங்கள் முக்கிய பொருளாதார அமைப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று மஹிந்திரா குறிப்பிட்டார்.

இது முந்தைய கொள்கைச் சிந்தனையிலிருந்து ஒரு தெளிவான விலகலைக் குறிக்கிறது என்றும், அதில் நகர்ப்புறங்கள் வளர்ச்சியை இயக்கக்கூடிய மூலோபாய சொத்துக்களாகக் கருதப்படாமல், நிர்வகிக்கப்பட வேண்டிய சிக்கல்களாகவே பெரும்பாலும் பார்க்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், வெற்றிகரமான நகரமயமாக்கல் என்ற கருத்தை வெளியீடு மற்றும் பொருளாதார எண்களுடன் மட்டும் இந்த ஆய்வறிக்கை கட்டுப்படுத்தவில்லை என்பதை மஹிந்திரா எடுத்துரைத்தார்.

"இந்தச் சிந்தனை பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களில் அர்த்தமுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டால், அது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாற்றத்தைக் குறிக்கும்: நகரங்களைச் சிக்கல்களாக நிர்வகிப்பதிலிருந்து, இந்தியாவின் வளர்ச்சிக்கான தளங்களாக அவற்றை உருவாக்குவது" என்று அவர் கூறினார்.

வாழத் தகுதியான சூழலுக்கு முன்னுரிமை அளிக்கும் நகரங்கள், திறமையாளர்களை ஈர்ப்பதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும், காலப்போக்கில் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று மஹிந்திரா மேலும் கூறினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதை வலுவாக உள்ள போதிலும், உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கம் தாமதமாக வெளிப்படக்கூடும் என்பதால், கொள்கை வகுப்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருங்காலங்கள் குறித்து பேசிய மஹிந்திரா, பொருளாதார ஆய்வில் கோடிட்டுக் காட்டப்பட்ட யோசனைகள் எதிர்கால வரவு செலவுத் திட்டமிடல் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களில் அர்த்தமுள்ள வகையில் பிரதிபலித்தால், இந்திய நகரங்கள் அணுகப்படும் விதத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாற்றத்தை அது குறிக்கும் என்று கூறினார்.

Summary

The Economic Survey presented this year marks an important shift in India's policy by placing cities at the centre of the country's economic strategy, rather than treating them as administrative afterthoughts, stated Anand Mahindra, Chairman of the Mahindra Group, reacting to the survey.

 ஆனந்த் மஹிந்திரா
வகுப்புவாதம், வெறுப்பு அரசியலுக்கு எதிராக ராகுல்: சசி தரூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com