சென்னை பெரம்பூரில் எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.
சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, திடீரென் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதன்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் பலத்த தீ காயமும், பத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்கள் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Regarding the death of one person in a cylinder explosion during the filming of S.J. Suryah's movie 'Killer' in Perambur, Chennai...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









