ஆந்திரப் பிரதேசத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும், அடுத்த 90 நாள்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தடையை 13 முதல் 16 வயதுடையவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இவ்வாறு, சிறார்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் மாநிலங்கள் அதிரடி முடிவை வெளியிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கின்றது. அதேவேளையில், இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களுக்குப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Summary
The Chief Minister of Andhra Pradesh has announced that children under the age of 13 will be banned from using social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

இந்தோனேசியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


