வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்படித்து எரிந்ததில் நல்வாய்ப்பாக காரில் இருந்த தம்பதியினர் உயிர்தப்பினர். தகவறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (33). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியுடன் சாப்பிடுவதற்காக வேலூர் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியை கார் கடக்கும் போது காரின் முன் பகுதியில் புகை எழுந்த நிலையில், திடீரென காரின் முன் பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இதையடுத்து செய்வதறியாது தவித்த தமீம் அன்சாரி காரை சாலையிலேயே விட்டுவிட்டு நல்வாய்ப்பாக காரில் இருந்து மனைவியை பத்திரமாக மீட்டுள்ளார்.
இதுகுறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Car suddenly catches fire while driving on the road in Vellore. Couple survives...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வேலூரில் மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!
வீடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு



