நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காபி குடித்தால் நீண்ட நாள் வாழலாம் :ஆய்வில் தகவல்

ஒரு நாளைக்கு 1.5 முதல் 3 லிட்டர் வரை காபி குடித்தால் விரைவில் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2022, 6:29 pm IST

ஒரு நாளைக்கு 1.5 முதல் 3 லிட்டர் வரை காபி குடித்தால் விரைவில் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் தினசரி காபி குடிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் பிரிட்டனிலிருந்து 1,71,000 பேர் பங்கேற்றனர். அவர்கள் இதயநோய் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்படாதவர்களாக இருந்தனர். அவர்கள் தினசரி எவ்வளவு காபி குடிக்கிறார்கள் என்பது குறித்த தரவுகள் சேகரிக்கப் பட்டன. 7 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட இந்த தரவின் மூலம் காபியில் எந்த ஒரு இனிப்பு சுவையூட்டும் பொருளையும் சேர்க்காமல் குடித்தவர்கள், காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் 16-லிருந்து 21 சதவிகிதம் வரை விரைவில் இறப்பதற்கான வாய்ப்பு குறைவு எனக் கண்டறியப்பட்டது.

அதேபோல இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் யாரேல்லாம் தினசரி 1.5 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை இனிப்பு சுவையினைச் சேர்த்து காபி அருந்தினார்களோ, அவர்கள் காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் 29 முதல் 31 சதவிகிதம் வரை விரைவில் இறப்பதற்கான வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.