உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

உங்கள் முகம் தெய்விக அழகுடன் தேஜஸாக வேண்டுமா? இதோ டிப்ஸ்

ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து

Published On :7 பிப்ரவரி 2024, 3:35 pm IST

ஆப்பிள் உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை செய்கிறதோ அதேப்போன்று இதில் உள்ள விட்டமின்கள், மினரல் சத்துக்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தந்து அழகு சேர்க்கிறது. ஆப்பிளைக் கொண்டு என்னவகையான அழகு செய்யலாம் பார்ப்போம்:
 
ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் முகம் இளமையாக இருக்கும்.
 

முகப்பருவைத் தடுக்க

ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கடலைமாவு கொண்டு கழுவி விட வேண்டும். முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.
 

 பளிச் தோற்றத்திற்கு

ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் மசித்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர, அற்புதமான ஸ்கின் டோனராக இது வேலை செய்து சருமத்தில் ஜொலிப்பைத் தரும். மிருதுவாகவும், பளிச்சென்ற தோற்றத்தையும் தரும்.
 

Story image

தோல் வறட்சி நீங்க
 ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வர . மழைக்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.
 

முகத்தில் உள்ள கருமையை அகற்ற

ஆப்பிளில் சாறு எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவி, காய்ந்ததும் பயத்தம் மாவு தேய்த்துக் குளித்து வர, புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும். வெய்யிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை அகற்றும்.
 

ஜொலிப்பை பெற

திடீரென ஏதாவது விசேஷத்திற்கு அல்லது பார்ட்டிக்கு போகவேண்டுமானால், அந்த சமயங்களில் ஆப்பிள் கை கொடுக்கும். ஆப்பிள்சாறு மற்றும் மாதுளம்பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி பத்துநிமிடம் வைத்திருந்து காய்ந்தபின் முகத்தை கழுவினால் முகம் ஜொலிக்கும்.
 

கரும்புள்ளிகள் மறைய

முகத்தில் கரும்புள்ளிகள், கருந் திட்டுகள் இருந்தால் அதற்கு ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் பேக்காக போட்டு வர, ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.