விருது விழாவிற்கு மட்டுமில்லை. அனுஷ்கா, விராட் தம்பதியினர் இத்தாலியில் திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கள் மும்பை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளித்த ரிஷப்சனிலும் கூட அனுஷ்கா அழகான சிவப்பு நிற பனாரஸ் கைத்தறி சில்க் புடவையே உடுத்தி வந்து பாந்தமாக தரிசனம் தந்தார். முன்பெல்லாம் வட இந்திய ஸ்டைலில் வெஸ்டர்ன் உடைகளிலும், காக்ரா சோளி, லெஹங்காவிலும் மட்டுமே பார்க்க வாய்த்த அனுஷ்கா ஷர்மா தற்போது இந்தியப் பாரம்பரிய உடையான புடவைகளில் வலம் வருவது அவரது ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ். அதற்கேற்றார் போல அடுத்து வரவிருக்கும் அவரது புதிய திரைப்படமான ‘சுய் தாஹியின்’ தீம் மேட் இன் இந்தியா என்பதாகவே இருப்பதால் அதற்குப் பொருத்தமாக இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய கைத்தறிப் பட்டுப் புடவைகளை உடுத்திக் கொண்டு வலம் வரத் தொடங்கி இருக்கிறார் அனுஷ்கா.