ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

கோதுமை தோசைக்கு சிறந்த காம்போ ஸ்பைஸி அன்லிமிடட் உப்பு, உறைப்பு மல்லிச் சட்னி!

கோதுமை தோசை தொண்டைக்குள் இறங்காது என்று அடம் பிடிப்பவர்களுக்கு இந்த உப்பு, உறைப்பு நிறைந்த மல்லிச் சட்னி செய்து சாப்பிடக் கொடுத்தால் பிறகு காலத்துக்கும் கோதுமை தோசையை வெறுக்கவே மாட்டார்கள்.

News image
Updated On :20 மார்ச் 2017, 2:08 pm IST

தேவையானவை:

காய்ந்த கொத்துமல்லி விதை: 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 15 லிருந்து 18 வரை
உறித்த பூண்டு: 5 பல்
உளுத்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த கறிவேப்பிலை: 1 கைப்பிடி
புளி / தக்காளி: புளி 1 நெல்லிக்காய் அளவு / தக்காளி எனில் 4
பனை வெல்லம்: 1 நெல்லிகாய் அளவு
உப்பு: தேவையான அளவு
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை

செய்முறை:

வாணலியை சூடாக்கி அதில் 1 டீஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும், உளுந்து சிவக்க பொரிந்த பின் அதில் கொத்துமல்லி விதை, நீட்டு மிளகாய் வத்தல் இரண்டையும் போட்டு கருகாமல் சிவக்க வறுக்கவும், இதனுடன் உறித்த பூண்டு மற்றும் காய்ந்த கறிவேப்பிலையையும் இட்டு மொறு மொறுவென வறுத்த பின் புளி அல்லது தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி விரைவாக வதங்க வேண்டுமெனில் அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் அதனுடன் பனைவெல்லம் சேர்த்து ஓரிரு முறைகள் கிளறி விட்டு இறக்கி ஆற விடவும். தக்காளிக்குப் பதிலாக புளி சேர்ப்பதாக இருந்தால் நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கிளறி விட்டு இறக்கலாம்.

வறுத்த பொருட்கள் ஆறியதும் அளவாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அரைத்த மல்லிச் சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு கடுகு, உளுந்து தாளித்து மேலாக 1 சிட்டிகை பெருங்காயத்தூள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

தண்ணீர் சேர்க்காமல் எண்ணெய் சற்று அதிகமாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் 1 வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும். துவையல் அல்லது கெட்டிச் சட்னியாகப் பயன்படுத்தலாம். 

இது அரிசி தோசைக்கும் தொட்டுக் கொள்ளச் சுவையாகத் தான் இருக்குமென்றாலும், கோதுமை தோசை தொண்டைக்குள் இறங்காது என்று அடம் பிடிப்பவர்களுக்கு இந்த உப்பு, உறைப்பு நிறைந்த மல்லிச் சட்னி செய்து சாப்பிடக் கொடுத்தால் பிறகு காலத்துக்கும் கோதுமை தோசையை வெறுக்கவே மாட்டார்கள். அப்படி ஒரு சிறப்பான காம்போ இது!

செய்து சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.