விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மழை காலத்துக்கேற்ற மிளகு சூப்!

மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2018, 3:37 pm IST

மிளகு சூப்

தேவையானவை: 
துவரம்பருப்பு - ஒரு  கிண்ணம்
வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்)
ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்)
தேங்காய்த் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்)
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - அரைத் தேக்கரண்டி
வெண்ணெய் - தலா 2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு.
மசாலாவுக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மிளகு - 2  தேக்கரண்டி 
கொத்துமல்லி - 3 தேக்கரண்டி
மஞ்சள்  -  1 துண்டு
மிளகாய் வற்றல் - 10
சோம்பு - அரை  தேக்கரண்டி

Story image

செய்முறை: மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெய்யைச்  சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையைப் போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் மசாலா, துவரம்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும். மிளகு சூப் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.