கேரளாவில் ஞாயிறு தோறும் குழந்தைகள் மருத்துவமனையாக மாறும் காவல்நிலையங்கள்!
சைல்டு ஃப்ரெண்ட்லி போலீஸ் ஸ்டேஷன்...
கேரளாவில் இதுவரை 6 காவல்நிலையங்கள் வார இறுதியில் மட்டும் குழந்தைகள் நல மருத்துவமனையாக செயல்படுமாறு கேரள அரசின் காவல்துறை அமைச்சகம் திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கு காவல்துறையினரைக் கண்டால் பயம் வரக்கூடாது. நட்புணர்வே தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த சைல்டு ஃப்ரெண்ட்லி போலீஸ் ஸ்டேஷன்கள்’ வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக கேரள காவல்துறை உயர்அதிகாரிகள் கூறுகின்றனர். குழந்தைகள் காவல்நிலையங்களைக் கண்டும், காவலர்களைக் கண்டும் பயம் கொள்ளாமல் இருக்க காவல்துறையின் உள்ளே குழந்தைகளுக்குத் தோதாக பல்வேறு விதமான மிருகங்கள், பறவைகள் மற்றும் கார்ட்டூன் கேரக்டர்களின் படங்கள் வரையப்பட்டு காவல்நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.
கேரள காவல்துறை மற்றும் கேரள அரசின் இத்திட்டம் மாபெரும் வெற்றி பெறும் என இத்திட்டத்தில் இணைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Courtesy: asianet news.
Related Article
உலகின் மிக அதிக எரிச்சலூட்டக்கூடிய சத்தம் எது? இதோ அறிவியல் பூர்வமான விளக்கம்!
இதென்ன குழந்தைத் திருமணமா? சரியாக மாலை மாற்றக்கூடத் தெரியவில்லையே மாப்பிள்ளைக்கு!
கேரளாவின் பாரம்பர்யப் பெருமை மிக்க ‘அரக்கல் அரசி’ ஆயிஷா பீவி மரணம்!
சிறந்த உள்ளடக்கங்களுடன் பலவிதமான செய்திகள் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும்: நடிகை கொங்கனா சென்!
உபேரில் நிகழ்ந்த குடுமிப்பிடி சண்டை, பெண் பத்திரிகையாளருக்கு நியாயம் கிடைக்குமா?
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!