அரக்கல் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அக்குடும்பத்தின் தலைவருமான அரக்கல் பீவி இன்று காலமானார். வயோதிகத்தின் காரணமாக மரணம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது பூர்வீக அரச இல்லமான தலசேரி, சிரக்காரா ராயல் ஹவுஸில் காலமானார். அவருக்கு வயது 93. அரசிக்கு நான்கு பிள்ளைகள். சஹீதா, சாதிக், முகமது ராஃபி மற்றும் சம்சீர். ஆயிஷா பீவியின் கணவர் சி ஒ மொய்து கேயி மற்றும் அவருடைய மகன்களில் ஒருவருமான ராஃபி இருவரும் முன்பே காலமாகி விட்டனர். அரக்கல் ராஜ்ஜியத்தின் 37 வது அரசியாகக் கருதப்படும் அரக்கல் பீவி 2006 ஆம் ஆண்டில் செப்டம்பர் 17 ல் அரக்கல் அரசியாகப் பதவியேற்றார். அவருக்கு முன்னதாக அரக்கல் அரசியாக இருந்தவர் சுல்தானா அயிஷா அலிராஜா. ஆயிஷா பீவியின் இறுதிச் சடங்குகள் தலசேரி ஒடதில் மசூதியில் முழு மாநில அரசு மரியாதையுடன் நடைபெறும் என அரண்மனை வட்டாரம் தெரிவித்திருக்கிறது. இவரது மரணத்தைத் தொடர்ந்து இவரையடுத்த தங்கையான அதிரஜா ஃபாத்திமா முத்து பீவி அடுத்த அரசியாக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
அரக்கல் அரச குடும்பம் கேரளாவில் உள்ள பாரம்பரியம் மிக்க இஸ்லாமிய அரச குடும்பங்களில் தாய்வழிச் சொத்துரிமையைப் பின்பற்றும் அரச குடும்பங்களில் முதன்மையானது. இக்குடும்பங்களில் வயதில் மூத்த நபரே அரசியாகக் கருதப்படுவார். கேரளாவின் கண்ணூர் நகரமும், லட்சத்தீவின் தெற்குப் பகுதியும் இவர்களது அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை. அரக்கல் நகர், மலபார் கடற்கரைப் பகுதியின் தலைநகராக இருந்தது. இவர்களில் பட்டத்திற்கு வரும் அரசர் அலிராஜா எனவும் அரசி அரக்கல் பீவி எனவும் அழைக்கப்படுவது வழக்கம்.
Related Article
உபேரில் நிகழ்ந்த குடுமிப்பிடி சண்டை, பெண் பத்திரிகையாளருக்கு நியாயம் கிடைக்குமா?
சிறந்த உள்ளடக்கங்களுடன் பலவிதமான செய்திகள் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும்: நடிகை கொங்கனா சென்!
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
இங்கிலாந்து அரச குடும்பத்தின் ராயல் விதிகளை புறக்கணித்தார் மேஹன் மார்க்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

மேக்கேதாட்டு தனித்தீர்மானம்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



