வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வீக் எண்ட் ஜோக்ஸ்

என் வீட்டுக்காரருக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு. வீட்டைப் பூட்டிட்டு  போய் திரும்பவும் வந்து ஒன்னுக்கு ரெண்டு தடவை பார்த்துட்டு வருவாரு டாக்டர்

News image
Updated On :12 ஜனவரி 2019, 2:15 pm IST


'என் வீட்டுக்காரருக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு. வீட்டைப் பூட்டிட்டு போய் திரும்பவும் வந்து ஒன்னுக்கு ரெண்டு தடவை பார்த்துட்டு வருவாரு டாக்டர்'
'அது நல்லதுதானம்மா...'
'நான் சொன்னது பக்கத்து வீட்டோட பூட்டை'

**

'புது வருஷத்தில இருந்து பைசா கடன் வாங்க மாட்டேன்டா'
'அப்படியா?'
'ஆமா... ரூபாய் நோட்டாத்தான் வாங்குவேன்'

**
'தலைவா லஞ்ச ஊழல்துறைக்கு ஓராளை நியமிக்கப் போறீங்களாமே... யாரை நியமிக்கப் போறீங்க?'
அதிகமா யார் தர்றாங்களோ... அவங்களைத்தான்'

தீ.அசோகன், சென்னை-19.


'என்ன இந்த டீக்கடையிலே  டீ  தர்றப்ப ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு சொல்லி  
டீ  தர்றாங்க... ஏன்?'
'நான்தான் சொன்னேன் இல்ல. இங்க ஏலம் போட்ட டீ  கிடைக்கும்ன்னு'

**
'அந்த டாக்டர் ஈயைப் பார்த்ததே இல்லை போலிருக்கு...'
எப்படிச் சொல்றே?'
'பல்லு வலின்னு போனா "ஈ' காட்டுன்னு சொல்றாரே?'

எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

'உண்மையைச் சொல்லணும்னா விளம்பரம்தான் எனக்குச் சோறு போடுது'
'நீங்க விளம்பர ஏஜெண்டா இருக்கீங்களா?'
'அதெல்லாமில்லை... டி.வி.யில விளம்பரம் போட்டால்தான் என் மனைவி எனக்கு சோறு போடவே வருவாள்ன்னு சொன்னேன்'

வி.ரேவதி, தஞ்சை.


'கிரிக்கெட் பிளேயர்ஸ் எல்லாம் எப்படி பேசுவாங்க தெரியுமா?'
எப்படி?'
'ஓவரா பேசுவாங்க'

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

'ஏன்டா மாப்பிள்ளே... யாராவது முக்கியமான ஆள் இறந்துட்டா வானத்தை நோக்கிசுடுறாங்களே அது எதுக்காக?'
'இறந்தவங்க ஆவியாக் கூட  தப்பிச்சிடக் கூடாதுன்னுதான்.'

எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.