சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல், விநியோகத்தை திரும்பப் பெறச்சொல்லி FDA உத்தரவு!

பாக்டீரியா படிந்த உணவை உண்ட 12 முதல் 72 மணி நேரத்திற்குள் உண்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும்.

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 12:48 pm

சான்ஃபிரான்சிஸ்கோ: வடக்கு கலிபோர்னியா பகுதிகளில் உள்ள சில்லறை வர்த்தகக் கடைகளில் விநியோகிக்கப்படும் M D H சாம்பார் மசாலா பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க உணவு ம்ற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அறிவித்துள்ளது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட மசாலா பொடி நிறுவனமானது, தங்களது சமீபத்திய தயாரிப்பு ஸ்டாக்கில் இருந்து கலிபோர்னிய கடைகளில் விநியோகிக்கப்பட்ட  3 லாட் மசாலா பொடி பாக்கெட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது.

ஆர் பியூர் (R Pure) அக்ரோ ஸ்பெஷாலிட்டீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஹவுஸ் ஆஃப் ஸ்பைசஸ் (இந்தியா) நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்ட இந்த மசாலாப்பொடி தயாரிப்பு FDA வால் சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்தின் மூலம் சோதிக்கப்பட்டது. அந்தச் சோதனையில் தான் குறிப்பிட்ட இந்த மசாலாப்பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல் இருப்பது தெரிய வந்தது.

சால்மோனெல்லா பாக்டீரியா பரவலுக்கு உள்ளான உணவுப் பொருட்களை உட்கொள்வதால் சால்மோனெல்லாசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் மனிதர்களுக்கு உண்டு. இந்த நோய்க்கூறின் பொதுவான அறிகுறிகளாகக் கருதப்படுபவை எவையெனில்;

பாக்டீரியா படிந்த உணவை உண்ட 12 முதல் 72 மணி நேரத்திற்குள் உண்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும்.

இந்த நோய் பொதுவாக 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான மக்கள் சிகிச்சியின்றியே குணமாகி விடக்கூடும் என்றாலும் சிலருக்கு உடனடியாக நோய் குணமாகாத சூழலில் வயிற்றுப் போக்கு தொடர்ந்து நிற்காமலிருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். வயதான பெரியவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தித் திறன் கொண்டவர்கள் மேற்கண்ட அறிகுறிகளின் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடலாம்.

எனினும். வரும் முன் காப்போம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மசாலா பொடியில் சால்மோனெல்லா ஊடுருவல் இருப்பது தெரிந்த மாத்திரத்தில்  அதுவரை புழக்கத்தில் இருந்த MDH சாம்பார் மசாலாப் பொடி பாக்கெட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறு சம்மந்தப்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணையிட்டு அதைச் செயல்படுத்துவதில் வெற்றியும் கண்ட FDA வைப் பாராட்ட வேண்டும்.

Related Article

பால் விலை பெட்ரோல் விலையை விட அதிகம் இங்கே?!

இனவெறி பிடித்த We Qutub உணவகத்துக்கு சீக்கிய இளைஞர் வைத்த செக்!

இந்தியாவின் மிக விலையுயர்ந்த குடியிருப்புப் பகுதிகளுக்கான டாப் 10 பட்டியலில் சென்னையின் வலுவான தாக்கம்!

உன்னதக் காதல் இது தானோ! கணவரின் இறந்த உடலைப் பார்த்த கணமே மரித்த மனைவி!

மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பிய வேலூர் தந்தைக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.