டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடல், மனப்பயிற்சி புற்றுநோயாளிகளின் சோர்வைக் குறைக்கும்: ஆய்வில் தகவல்

உடற்பயிற்சி, மனப்பயிற்சி மூலம் மார்பக புற்றுநோயாளிகளின் சோர்வை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :31 டிசம்பர் 2020, 11:25 am

DIN

உடற்பயிற்சி, மனப்பயிற்சி பயிற்சி மூலம் மார்பகப் புற்றுநோயாளிகளின் சோர்வை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

உலக அளவில் நுரையீரல், மார்பகம், இரைப்பை புற்றுநோயின் தாக்கம்  அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய அளவில் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியனவற்றின் தாக்கமே 75 சதவிகிதம் இருக்கிறது. 

புற்றுநோயைப் பொருத்தவரை நோய் வந்தவுடன் உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் தப்பிக்கலாம். மேலும் தொடர்ந்து அவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி லேசான உடற்பயிற்சியும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியதுக்கு உதவும். 

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் மன ரீதியான பயிற்சியின் விளைவுகள் குறித்து இல்லினாய்ஸ் அர்பானா-சேம்பெயின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

சைக்கோ-ஆன்காலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவுகள் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் சிகிச்சையின்போது அவர்கள் மன ரீதியாக மிகவும் சோர்வடைகின்றனர். எனவே, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகளை அளிக்க வேண்டும், அதேபோன்று லேசான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

புற்றுநோயிலிருந்து தப்பித்தவர்கள் பெரும்பாலானோருக்கு மன மற்றும் உடல் சோர்வு, பதட்டம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. 

எனவே, இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். உடற்பயிற்சி அல்லது மனப்பயிற்சி, ஒரு குழுவினர் இரண்டும் செய்ய பரிந்துரைக்கப்பட்டனர்.

இவ்வாறான முயற்சியில் அனைவருமே ஓரளவுக்கு மன மற்றும் உடல் ரீதியாக முன்னேற்றத்தைக் கண்டனர். ஆனால் இரு பயிற்சிகளையும் ஒருங்கே செய்தவர்கள் உடல், மன அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணர்ந்தனர். 

எனவே, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தொடர்ந்து உடல் மற்றும் மனப்பயிற்சிகளை செய்துவர ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.