ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவரா நீங்கள்..?

செல்லப்பிராணிகள் வளர்ப்பது குறித்த அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை வெளிப்படுத்துகிறது ஓர் ஆய்வு. 

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 5:24 am

செல்லப்பிராணிகள் வளர்ப்பது குறித்த அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை வெளிப்படுத்துகிறது ஓர் ஆய்வு. 

தற்போது செல்லப்பிராணிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அந்த வகையில் வீட்டில் ஒரு நபராக முக்கியத்துவம் கொடுத்து செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.  

இந்நிலையில், செல்லப்பிராணிகள் வைத்திருப்பதனால் மனிதனில் உண்டாகும் மாற்றங்கள் குறித்த ஒரு ஆய்வினை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, செல்லப்பிராணி வைத்திருப்பவர்கள் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற அறிவியல் பூர்வமான உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள் மூலமாக நம் வாழ்வில் ஓர் அன்பு வட்டத்தை உருவாக்க முடியும் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால், இந்த ஆய்வின்படி, தங்களது தனிமையைப் போக்கவே செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக மேற்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர், உளவியலாளர் ஹரோல்ட் ஹெர்சாக் கூறுகிறார். இவர் மனித-விலங்கு இடையேயான தொடர்பை நீண்ட காலமாக ஆய்வு செய்தவர்.

முக்கியமான மன அழுத்தத்தினால் ஆஸ்துமா, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இரைப்பை புண்கள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள் என்று கூறுகிறார். 

வயதானவர்கள், தங்கள் பிள்ளைகள் அருகில் இல்லாத சமயத்தில் அவர்கள் மூலம் கிடைக்கும் அன்பை செல்லப்பிராணிகள் வாயிலாக காண்கின்றனர். செல்லப்பிராணிகள் மூலமாகவே தனிமை விரும்பிகளின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஒட்டுமொத்தமாக செல்லப்பிராணிகள் வளர்ப்பத்து உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கும், செல்லப்பிராணிகள் இல்லாதவர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.