மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனிமையில் இருப்பது நல்லதா? - ஆய்வு என்ன சொல்கிறது?

சமூகத்தில் தனிமையைவிட சக மனிதர்களுடன் பேசுவது பழகுவது நல்வாழ்க்கைக்கு சிறந்தது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

News image
Updated On :5 மார்ச் 2022, 8:57 am

DIN

சமூகத்தில் தனிமையைவிட சக மனிதர்களுடன் பேசுவது, பழகுவது நல்வாழ்க்கைக்கு சிறந்தது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

குறிப்பாக, மற்றவர்களுடனான அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை என்பதனால் சக மனிதருடன் உரையாடுவது அவசியமானது என்று கூறுகிறது இந்த ஆய்வு. 

இச்சமூகத்தில் தனிமை விரும்பிகள் பலர் இருக்கின்றனர். எந்தவொரு சூழ்நிலையிலும் பெரிதாக யாரையும் எதிர்பார்க்காதவர்கள். அனைவரிடமும் சகஜமாக உரையாடும் ஒருவருக்கு, தனிமையில் இருப்பவரைப் பார்த்தால் மிகவும் வித்தியாசமாகத்தான் தோன்றும். 

அதுபோல தனிமை விரும்பிகள் அமைதியை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், விருப்பமின்றி அதிக தனிமையில் இருப்பது ஆபத்து என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

தனியாக இருப்பதைவிட சமூகத்தில் சில மனிதர்களுடன் உரையாடுவது வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும். ஆனால், உரையாட, உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு சரியான நபரைத் தேர்ந்தெடுத்தால் உங்களின் வாழ்க்கை மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

அவ்வாறே இந்த ஆய்வும் கூறுகிறது. சக மனிதர்களுடன் உரையாடுவது, பழகுவது அவர்களின் நல்வாழ்வுக்கு உதவும் என்கிறது. தனிமை அல்லது பிறருடன் இருப்பதைப் பொருத்தே நம் உணர்வுகளும் வேறுபடுகிறது என்பதையும் கூறுகிறது. 

'ஜர்னல் ஆஃப் ஹேப்பினஸ் ஸ்டடீஸ்' என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள், தாங்கள் தனிமையில் இருந்ததைவிட பிறருடன் இருக்கும்போது மகிழ்ச்சியை உணர்ந்ததாக 60% பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் வேறுபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

சிலர் விருப்பத்தின் பேரில்/கட்டாயத்தின்பேரில் தனிமையிலோ அல்லது பிறருடனோ இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. அதாவது தனிமை விரும்பிகளை கட்டாயப்படுத்தி பிறருடன் பழக வைத்தால் அது சரியல்ல. அதுபோல எப்போதும் கூட்டமாக நண்பர்களுடன் இருப்பவர்களுக்கு தனிமையின் சுகம் தெரியாது. 

எனவே, தனிமையோ, கூட்டமாகவோ விருப்பத்தின்பேரில் இருந்தால் அது நல்வாழ்வுக்கு உதவும் என்றும் ஆனால் பெரும்பாலாக பிறருடன் இருக்கும்போது மனம் மகிழ்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் உசைல் தெரிவிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.