பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கேரட் ஜூஸ் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

கேரட்டில் ஏ, சி, கே  போன்ற சத்துகளும் பொட்டாசியம், இரும்புச் சத்து போன்ற தாதுப்பொருள்களும் உள்ளன. மேலும் இதில், ஆன்டி- ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. 

Published On :

கேரட்டை அப்படியே சாப்பிடுவது கடினமாக இருப்பவர்கள் ஜூஸாக குடித்தால் உடலுக்கு நீர்ச்சத்தும் சேரும். 

கேரட்டில் ஏ, பி6, சி, கே1, பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன. மேலும் இதில், ஆன்டி- ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. 

கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். மாலைக்கண் நோய் குணமாகும். 

கேரட்டில் பல வண்ணங்கள் இருந்தாலும் ஆரஞ்சு நிற கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் அதை சாப்பிடுவது நல்லது. 

எலும்புகள் வலுவடைந்து, உறுதித்தன்மை அதிகரிக்கும். ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய்  வரும் அபாயத்தைக் குறைக்கும். 
 
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரையச் செய்து உடல் எடையைக் குறைக்கிறது. 

செரிமானத்தைத் தூண்டுகிறது. வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்கிறது. 

சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சருமத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது. 
 
கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 

உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.