தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சருமப் பொலிவுக்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?

பொதுவாக மலைப் பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்? 

News image
Updated On :9 டிசம்பர் 2023, 9:30 am

DIN

பொதுவாக மலைப் பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிட அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் குங்குமப்பூ அழகுப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

அந்த வகையில் சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்? 

♦குங்குமப்பூவை பால் அல்லது தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

Story image

♦குங்குமப்பூ வயதான தோற்றத்தைத் தவிர்க்கப் பயன்படுகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை, வடுக்களைப் போக்குகிறது. 

♦ இதில் உள்ள குரோசின், குரோசேட்டின் ஆகியவை சருமத்திற்கு நிறமளிக்கும். சருமம் பொலிவற்று இருந்தாலோ அல்லது கருமையாக இருந்தாலோ குங்குமப்பூ சிறந்த மருந்து.

♦இதில் உள்ள ஆன்டி- ஆக்சிடன்ட் இயற்ககையாகவே சருமத்தை பளபளப்பாக்கும். 

♦முகப்பரு பிரச்னையால் அவதிப்படுவோருக்கு அதனை படிப்படியாகக் குறைக்க குங்குமப்பூ பயன்படும். மேலும் சிலருக்கு சருமம் சிவந்து போதல் ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் தொடர்ந்து குங்குமப்பூவைப் பயன்படுத்தினால் மாற்றம் தெரியும். 

♦கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் கண்கள் பொலிவானதாகத் தோன்றும், 

♦சருமத்தில் உள்ள துளைகளை இறுகச் செய்து சருமத் தொற்றுகளைத் தவிர்க்கும். 

♦தேங்காய் பால் அல்லது பாதாம் பாலுடன் சேர்த்து பயன்படுத்தும்போதும் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.