மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேஸ் அடுப்பில் சமைத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுமா? - ஆய்வு சொல்வது என்ன?

கேஸ் சிலிண்டர்கள் இணைப்புள்ள அடுப்புகளில் இருந்து வெளியாகும் நச்சுத் துகள்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவுடன் தொடர்புள்ளதாக ஐரோப்பிய விஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

News image
Updated On :8 நவம்பர் 2023, 9:21 am

DIN

கேஸ் சிலிண்டர்கள் இணைப்புள்ள அடுப்புகளில் இருந்து வெளியாகும் நச்சுத் துகள்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவுடன் தொடர்புள்ளதாக ஐரோப்பிய விஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களாலும் பாதிப்பு இருக்கிறது என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

டச்சு விஞ்ஞானிகள் 247 வீடுகளில் உள்ள காற்றின் தரத்தை ஆய்வு செய்து அதில் நைட்ரஜன்-டை-ஆக்சைடு (NO2) சராசரியாக எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். அப்போது கேஸ் சிலிண்டர்கள் கொண்டு சமைப்பவர்களின் வீடுகளில் நைட்ரஜன்-டை-ஆக்சைடு இரண்டு மடங்கு இருப்பது தெரிய வந்தது. 

மேலும், கேஸ் சிலிண்டர்களைக் கொண்ட 4 வீடுகளில் ஒரு வீடு, நிர்ணயிக்கப்பட்ட மாசு அளவை மீறுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் மின்சார குக்கர்களைப் பயன்படுத்தும்போது காற்று மாசு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

உணவுகளை சமைக்க, சமையல் எரிவாயு எரிக்கப்படுவதால் வெளியாகும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு போன்ற துகள்கள் நுரையீரலை சேதப்படுத்துவதாகவும் காற்றுப் பாதைகளை வீக்கப்படுத்துவதாகவும் இது குறிப்பாக குழந்தைகளிடையே ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் கூறுகிறது. 

சமைக்கும் நேரத்தில் சமையலறை மற்றும் வீட்டின் மற்ற அறைகளில் நச்சுத் துகள்கள் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. 

குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமையலறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இது உதவும் என்று ஸ்பெயினில் உள்ள ஜாம் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் தலைவர் ஜுவானா மரியா தெரிவித்தார். 

வெளிப்புற மாசைக் கட்டுப்படுத்த மட்டுமே பல்வேறு நாடுகள் அக்கறை காட்டி வரும் நிலையில் வீட்டிற்குள் ஏற்படும் இந்த காற்று மாசைக் குறைக்க விதிகளை வகுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

மின்சாரத்தைப் பயன்படுத்தி சமைக்க வலியுறுத்தும் ஆய்வாளர்கள், கேஸ் அடுப்புகளில் சமைக்கும்பட்சத்தில் நச்சுத் துகள்கள் வெளியேற காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள அறிவுறுத்துகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.