சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறதா? இது வயதானவர்களை மட்டும்தான் பாதிக்குமா?
நீரிழிவு நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் பெங்களூரு அஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனை சுரப்பியல் துறை நிபுணர் டாக்டர் டி.எம். மகேஷ்.
சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது
சர்க்கரை அதிகமாக சாப்பிடுவது டைப் -2 நீரிழிவு நோயை உருவாக்கும். ஆனால் இது ஒன்று மட்டும் காரணமல்ல. போதுமான இன்சுலின் உற்பத்தி (வகை-1) அல்லது இன்சுலின் எதிர்ப்பின் (வகை-2) காரணமாக ரத்த சர்க்கரை அளவை உடலால் கட்டுப்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மரபியல், வயது, உடல் உழைப்பின்மை, உடல் பருமன் ஆகியவை நீரிழிவு நோயின் ஆபத்துக் காரணிகளாகும்.
இதையும் படிக்க | வீட்டில் சமைக்கிற உணவிலும் வில்லங்கமா? எப்படி?
நீரிழிவு நோயாளிகள் இனிப்பு அல்லது மாவுச்சத்து உணவுகளைச் சாப்பிட முடியாது
நீரிழிவு நோயாளிகள் இனிப்புகள், கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடலாம். ஆனால், குறைவாக சாப்பிட வேண்டும். உடலில் ரத்த சர்க்கரை அளவின் சமநிலையைப் பொருத்து உண்ணலாம்.
கார்போஹைட்ரேட், ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கிறது, எனவே, கட்டுப்பாடு முக்கியமானது. இதில் முக்கிய விஷயம் ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்வது. கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள முழு தானியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து, புரதங்கள் அல்லது ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் ரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும்.
இதையும் படிக்க | பல் சொத்தைக்கு டீ/காஃபிதான் காரணமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?
நீரிழிவு நோய் வயதானவர்களை மட்டுமே பாதிக்கிறது
டைப்-2 வகை நீரிழிவு வயதானவர்களுக்கு மிகவும் பொதுவானது என்றாலும் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் உள்பட எந்த வயதினரையும் இது பாதிக்கலாம், குறிப்பாக உடல் பருமன் மற்றும் உடல் செயல்பாடின்றி அமர்ந்தே இருப்பவர்களுக்கு பாதிப்பு வரலாம்.
டைப்-1 நீரிழிவு, இது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும், இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ உருவாகிறது. வயது வித்தியாசமின்றி ஆரம்பகால கண்டறிதலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் அனைவருக்கும் முக்கியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செம்பருத்தி தேநீர் பற்றி தெரியுமா?

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் மின்வெட்டு

சர்க்கரை நோய் வாய்ப்பை அதிகப்படுத்தும் French Fries! | அறிவியல் ஆயிரம் | health Care
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



