வருங்கால மாமியாருக்கு மருமகள் எழுதிய கடிதம்!

மாமியாரும் ஒரு வகையில் அம்மா தான். அந்த அம்மாவை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் அமைகிறது மாமியார், மருமகள்களுக்கிடையிலான உறவின் அற்புத முடிச்சு.
வருங்கால மாமியாருக்கு மருமகள் எழுதிய கடிதம்!

மாமியார், மருமகள் உறவென்பது மிக அருமையானதொரு பந்தம். நாம் வாழும் இந்தப் பரந்த உலகில் நல்ல உள்ளம் கொண்ட, மருமகள்கள் மீது அதீதப் பாசமும், புரிதலும் கொண்ட அருமையான மாமியார்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதென்பது மருமகள்களின் சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும் பொருத்தது. மாமியாரும் ஒரு வகையில் அம்மா தான். அந்த அம்மாவை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் அமைகிறது மாமியார், மருமகள்களுக்கிடையிலான உறவின் அற்புத முடிச்சு. பெண்களுக்கு மாமியார் உறவு இணக்கமாக அமைந்து விட்டால் திருமண பந்தத்தில் பாதி வெற்றி என்றே சொல்லலாம்.

அந்த வகையில் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ள வாசகி ப்ரியா எதிர்காலத்தில் மாமியார் மெச்சும் சமர்த்து மருமகளாக வாழ தினமணி வாழ்த்துகிறது.

இதோ... கரூரிலிருந்து ப்ரியா தனது வருங்கால மாமியாருக்கு நேசத்துடன் எழுதிய கடிதம் வாசகர் பார்வைக்கு...

ப்ரியா தன் மாமியாரை, அம்மா என்றழைக்கவே விரும்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் ப்ரியா! புகுந்த வீட்டில் உங்களது மற்றொரு அம்மாவுடனும், கணவருடனும் மனமொத்து வாழ தினமணியின் வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com