கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாட்ஸ் ஆப்பில் இனி யாருமே உங்களை குழுக்களில் சேர்க்க முடியாது!

வாட்ஸ் ஆப் இல்லாமல் ஸ்மார்ட் போன் இல்லை என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.

News image
Updated On :5 மார்ச் 2019, 6:40 am

தினமணி

வாட்ஸ் ஆப் இல்லாமல் ஸ்மார்ட் போன் இல்லை என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ் ஆப் நிறுவனமும் கால மாற்றத்துக்கேற்ப பல்வேறு சேவைகளை அமல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதலில் தனித்தனியாக இயங்கி வந்த வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள், பின்னர் குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், தற்போது தனிநபர்களின் எண்ணிக்கையை விட, குழுக்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. பள்ளி நண்பர்கள் குழு, கல்லூரி நண்பர்கள் குழு, அலுவலக நண்பர்கள் குழு என தினந்தோறும் புதிதாக தொடங்கப்படும் ஏராளமான குழுக்களில் இருந்து தப்பிக்க முடியாமல், குழுக்களில் பகிரப்படும் தகவல்களைச் சிலர் பார்ப்பதே இல்லை. சிலர் குழுக்களை மியூட் செய்துவிடுகின்றனர். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரை புதிய குழுக்களில் சேர்க்கும் வசதி இருப்பதுதான் இதற்குக் காரணம்.

இந்தத் தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்களை விடுவிக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய சேவையை உருவாக்கியுள்ளது. எந்த ஒரு உறுப்பினரின் அனுமதி இல்லாமல் குழுவில் அவரை இணைக்க முடியாது என்பதுதான் இந்த புதிய சேவை, " வாட்ஸ் ஆப் பீட்டா'. இந்த சேவை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை அனைத்து வகையான வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, வாட்ஸ் ஆப் குழுவில் சேர மூன்றுவிதமான வழிமுறைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, முதலில், யார் வேண்டுமானாலும் உங்களை குழுக்களில் சேர்க்கலாம். இரண்டாவதாக, உங்கள் செல்லிடப்பேசியில் சேமிக்கப்பட்ட தொலைபேசி எண்களில் உள்ளவர்கள் மட்டுமே உங்களை குழுக்களில் சேர்க்கலாம். மூன்றாவதாக, யாருமே உங்களை குழுக்களில் சேர்க்க முடியாது. குழுக்களில் சேர்க்க அனுப்பப்படும் அழைப்பு 72 நேரத்துக்கு மேல் காலாவதியாகிவிடும்.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.