திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன?

காய்கறிகளில் சுரைக்காய் மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். 

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 3:07 pm IST

காய்கறிகளில் சுரைக்காய் மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். 

ஆனால், உடலில் நீர்ச்சத்தினை அதிகரிக்க, சுரைக்காயை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

சுரைக்காயில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருக்கிறது. 95% நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. 

நீர்ச்சத்து அதிகமிருப்பதால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீரகத்தில் கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. 

மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வு. மேலும் குடலில் புண்கள் இருந்தால் சுரைக்காய் சாப்பிட்டு வர குணமாகும். உடல் சூட்டைக் குறைக்கும். 
 
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்க சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிடலாம். 

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு 3 முறையாவது சுரைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. குறிப்பாக வயிற்றுப்பகுதில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க அதாவது தொப்பையைக் குறைக்கும் ஒரு எளிய மருந்து சுரைக்காய். 
 
சுரைக்காய் சாப்பிடுவதால் வயதாகும் சரும செல்களை புத்துணர்வு அடைய வைக்கும். இதனால் சருமம் பொலிவு பெறும். இளமையைத் தக்கவைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.