2020 - 21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதன் சிறப்பு அம்சங்கள்..
எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி புதிய பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்படும்.
கூட்டுறவு வங்கி விதிகளில் பெருமளவு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
வரி என்ற பெயரில் மக்களை சித்ரவதை செய்வதை ஏற்கவே முடியாது.
'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து' - என்ற குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
குழாய் வழியே சமையல் எரியாவு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்படும்.
உத்தரப்பிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
2020 - 21ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
#WATCH Delhi: Finance Minister Nirmala Sitharaman with the 'Bahi-Khata'. #Budget2020 ; She will present her second Budget today. pic.twitter.com/jfbSSHPMSy
— ANI (@ANI) February 1, 2020
2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் மோடி.
புதிதாக குறைக்கப்பட்டிருக்கும் வருமான வரி விகிதங்கள் அனைவருக்கும் அப்படியே பொருந்தாது. அதில், வரி செலுத்துவோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது ஒருவர் தனக்கு ஏற்கனவே வீட்டுக் கடன், 80சி, மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகை அலவன்ஸ், இதர வரிக்கழிவுகள் போன்றவற்றுக்குக் கிடைக்கும் வரிச் சலுகையையே தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் பழைய விகிதப்படியே வரி செலுத்த வேண்டியதிருக்கும்.
2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளிலேயே மிக நீண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை தொடர்ந்தார். ஆனால், திடீரென அவருக்கு அதிக வியர்வை ஏற்பட்டு, கடைசியாக இரண்டு பக்கங்கள் இருக்கும் போது தொடர்ந்து வாசிக்க முடியாமல், பட்ஜெட் உரையை சுருக்கமாக வாசித்து முடித்தார்.
நாட்டின் மூலதன செலவினங்கள் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
வரும் 2020 -21 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.