உடுமலை அருகே 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்: ஏராளமான போலீஸ் குவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுமார் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
உடுமலை அருகே 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்: ஏராளமான போலீஸ் குவிப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுமார் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைக்கு உட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கொள்ளுபாளையம் ஊராட்சியில் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. 

வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டின் பின்புறம் மை ஒட்டுவதாகக் கூறி ஒரு தரப்பு வேட்பாளர் புகார் கூறியதால் தகராறு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து உடுமலை கோட்டாட்சியர் ரவிக்குமார், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com