மின்சாதனம் பழுது: வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம்

கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மின்சாதனம் பழுது: வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம்
Published on
Updated on
1 min read

கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தேனி மாவட்டம்  போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், 13 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 53 பேரும், 14 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 49 பேரும், 15 ஊராட்சி மன்றங்களில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு 327 பேரும் போட்டியிடுகின்றனர்.  காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் மின்சாதனம் பழுதடைந்ததால் காலை 9 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

மேலும் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தங்க.தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com