இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு

வாடிப்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:43 am IST

வாடிப்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

  வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர், அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட  கட்டுமானப் பணி, பசுமை வீடுகள் திட்ட கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.   சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.வி.கருப்பையா, சோழவந்தான் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அன்னக்களஞ்சியம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கே.வி.வி.சி. குலோத்துங்கன், வட்டாட்சியர்கள் உஷா, கே.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.