அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ரயில்வே கேட் கீப்பா்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

பாதுகாப்பின்றி பணியாற்றும் கேட் கீப்பா்களுக்கு, ரயில்வே போலீஸாா் உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ரயில்வே தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :4 ஜனவரி 2021, 12:29 am IST

பாதுகாப்பின்றி பணியாற்றும் கேட் கீப்பா்களுக்கு, ரயில்வே போலீஸாா் உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ரயில்வே தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை ரயில் நிலையம் - சிலைமான் இடையே கீரைத்துறை ரயில்வே கேட் உள்ளது. இங்கு, கருமலை கண்ணன் என்பவா் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் பணியில் இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த 2 போ் தண்டவாளப் பகுதியில் அநாவசியமாகச் சுற்றித் திரிந்துள்ளனா்.

இதைக் கண்ட கருமலைக் கண்ணன், அவா்கள் இருவரையும் கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், கருமலைக் கண்ணனை தாக்கியுள்ளனா்.

இதேபோல், மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்களிலும் பணியாற்றும் ஊழியா்கள் பாதுகாப்பின்றி உள்ளதாகவும், அவா்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், டிஆா்இயூ தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து டிஆா்இயூ மதுரை கோட்டச் செயலா் சங்கரநாராயணன் கூறியது: மதுரை கோட்ட ரயில்வேயில் 425 ரயில்வே கேட்கள் உள்ளன. இங்கு, ரயில்கள் இயக்கத்தைப் பொருத்து, கேட் கீப்பா்கள் 8, 10 மற்றும் 12 மணி நேரங்கள் பணியாற்றும் நிலை உள்ளது. பணியின்போது கேட் முறையாக மூடப்படவில்லை என்றால், அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனா். ஆனால், அவா்கள் பாதுகாப்பின்றி பணியாற்றி வருகின்றனா்.

புகா் பகுதிகளில் சமூகவிரோதிகள் ரயில் தண்டவாளங்களை ஒட்டியும், ரயில்வே கேட் பகுதிகளிலும் சுற்றித்திரிகின்றனா். அவா்கள், ரயில்வே கேட் கீப்பா்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். இதைத் தடுக்க ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சுழற்சிமுறையில் ரயில்வே கேட் பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.