சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சக்கம்பட்டி சாயப்பட்டறைகளை மூடக்கோரி வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க உத்தரவு

தேனி அருகே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூடக்கோரும் வழக்கில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா்

Updated On :5 ஜனவரி 2021, 11:16 pm IST

தேனி அருகே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூடக்கோரும் வழக்கில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட சிறு சிறு சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இந்தச் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் ஆண்டிபட்டி பிரதான கால்வாயில் கலக்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சக்கம்பட்டியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.