மதுரையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை ஆரப்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் பாலசுப்ரமணியன் (22). இவா் திருப்பரங்குன்றம் மூலக்கரையில் உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் திருப்பரங்குன்றத்தில் இருந்து ஆரப்பாளைத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். பைக்காரா சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









