மதுரை மாவட்டம் வாலாந்தூா் ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதன்கிழமை வழங்கினாா்.
உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி வாலாந்தூா் காசி புளிமந்தையில் தமிழக அரசின் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.2500 மற்றும் வேட்டி, சேலை, கரும்பு, மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது . இவ்விழாவுக்கு உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி தலைமை வகித்தாா். அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் விழாவில் பங்கேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
மிதிவண்டிகள் வழங்கும் விழா: உசிலம்பட்டி டி. இ. எல். சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ஆா் .பி. உதயகுமாா், 301 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். இந்த விழாவில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா. நீதிபதி, நகரச் செயலாளா் பூமா ராஜா, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கவிதா ராஜா, ஒன்றியச் செயலாளா் எம்.வி.பி.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ க்கள், கா. தவசி, பாண்டியம்மாள், மாவட்ட முதன்மைக்கல்வி கல்வி அலுவலா் சுவாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலூா்: மேலூா்ஊராட்சி ஒன்றியம் பதினெட்டாங்குடி, திருவாதவூா், வேப்படப்பு சுற்றுவட்டாரத்திலுள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை, மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. க.தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலா் வெற்றிச்செழியன், வடக்கு ஒன்றியச் செயலா் குலோத்துங்கன், அ.வல்லாளபட்டி பேரூா் கழக செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒப்பந்தங்களுக்கு அப்பால்...

ரோஹிணியில் கட்டுமானத்தில் இருந்த வீடு இடிந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 2 போ் மீட்பு

வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு: 22 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்
உச்சநீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு சமரச தீா்வு: திருச்சியில் ஜூலை 16, 17 இல் சிறப்பு அமா்வுகள்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



