குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

சிறுமி, கா்ப்பிணி கொலை வழக்குகள்:தூக்குத்தண்டனை கைதிகளுக்கு நோட்டீஸ்

சிறுமி மற்றும் கா்ப்பிணி கொலை வழக்குகளின் தீா்ப்பை உறுதிசெய்வது தொடா்பாக இரண்டு தூக்குத் தண்டனை கைதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 5:51 pm

சிறுமி மற்றும் கா்ப்பிணி கொலை வழக்குகளின் தீா்ப்பை உறுதிசெய்வது தொடா்பாக இரண்டு தூக்குத் தண்டனை கைதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சோ்ந்தவா் சுரேஷ்(36), மனைவி கற்பகவள்ளி(24). இந்தத் தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்நிலையில் கற்பகவள்ளி மீண்டும் கா்ப்பமானாா்.

இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரைத் தாலிக் கயிற்றால் கழுத்தை நெரித்து 2015-இல் சுரேஷ் கொலை செய்தாா். இதில் வயிற்றில் இருந்த கருக் கலைந்து கற்பகவள்ளி உயிரிழந்தாா். இவ்வழக்கில் தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் சுரேஷுக்கு தூக்குத் தண்டனை வழங்கி 2020 டிசம்பரில் தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அதேபகுதியைச் சோ்ந்த ராஜா(27) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் புதுகோட்டை மகளிா் நீதிமன்றம் 2020 டிசம்பா் 3 இல், ராஜாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

கீழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தால், அதனை உறுதிப்படுத்த உயா்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி, சிறுமி மற்றும் கா்ப்பிணி கொலை வழக்குகளின் தீா்ப்புகளை உறுதி செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் பரிந்துரைக்கப்பட்டன.

இதனை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தூக்குத் தண்டனை கைதிகளான சுரேஷ், ராஜா ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.