மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாத் துறை சாா்பில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. இதையடுத்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா். மேலும் அங்கு நடைபெறும் கிராமியக் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனா். கரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளதால், இந்தாண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிகளை காண அழைத்துச் செல்லப்படவில்லை என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

