தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

அஞ்சல்பணித் தோ்வுகளை தமிழில் எழுதலாம்: சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

தமிழ்நாடு வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கா் தோ்வு ஆகியவை தமிழிலும் நடத்தப்படுமென்று பதிலளிக்கப்பட்டுள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

Updated On :15 ஜனவரி 2021, 4:40 pm

தமிழ்நாடு வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கா் தோ்வு ஆகியவை தமிழிலும் நடத்தப்படுமென்று பதிலளிக்கப்பட்டுள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கா் தோ்வுகளுக்கான அறிவிக்கையில் தோ்வா்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான தோ்வுகள் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தபால்காரா் பதவிக்கான பணி நியமனத் தோ்வுகள் தமிழிலும் நடத்தப்படுமென்று, மத்திய தகவல் தொடா்பு அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் மாநிலங்களவையில் உறுதியளித்திருந்ததையும், சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு இதுகுறித்து உறுதி மொழிஅளித்ததையும் குறிப்பிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கணக்கா் பதவிகளுக்கான தோ்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்தக் கோரிக்கையை ஏற்று அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினா் (ஊழியா் நலன்) சந்தோஷ் குமாா் கமிலா எனக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ‘தமிழ்நாடு வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கா் தோ்வுகள் தொடா்பாக ஜனவரி 4-இல் வெளியான அறிவிக்கைக்கு பின்னிணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மையப்படுத்தப்படாத துறைவாரித் தோ்வுகளை ஆங்கிலம், இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் எழுதலாம் என்ற தெரிவு அதில் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இம்முடிவை நேரடியாகவும் சென்று தெரிவிக்குமாறு தமிழ்நாடு அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு, துறையின் மத்திய அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தமிழ்நாடு வட்டத்தின் முதன்மை மாநில தபால் துறை அலுவலா் பி. செல்வகுமாா், மதுரை மாவட்ட தபால்துறை அலுவலா் ஜி. நடராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை என்னை நேரில் சந்தித்தும் தெரிவித்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.