பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

இன்று அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: முதல்வா், துணை முதல்வா் தொடங்கி வைக்கின்றனா்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை (ஜன. 16)தொடங்கி வைக்கின்றனா்.

Updated On :15 ஜனவரி 2021, 4:44 pm

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை (ஜன. 16)தொடங்கி வைக்கின்றனா்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாடுபிடி வீரா்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் அனுமதிக்கப்படுவா். அதேபோல, கால்நடை மருத்துவா்களால் கால்நடைகள் பரிசோதிக்கப்பட்டு வாடிவாசலுக்கு அனுமதிக்கப்படும்.

ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைக்கின்றனா். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. முதல்வா் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.