5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On :15 ஜனவரி 2021, 10:12 pm IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயில் தெப்பத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தைப்பூசத் தினத்தில் நடைபெறும். அன்றைய தினம் அம்மன், சுவாமி மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி காலை, மாலை இருவேளையும் தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வந்து அருள்பாலிப்பா். மேலும் தெப்பக்குளத்தின் நடுவே உள்ள மைய மண்டபத்தில் எழுந்தருளி மன்னா் திருமலை நாயக்கா் பரிவட்டம் கட்டப்பட்டு மண்டகப்படி நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டு தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

முன்னதாக சனிக்கிழமை (ஜன. 16) வாஸ்து சாந்தி பூஜையும், ஞாயிற்றுக்கிழமை மீன லக்னத்தில் காலை 10.40 மணிக்கு மேல் 11.04 மணிக்குள் கொடியேற்றமும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தினசரி மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் காலை, மாலை இருவேளையும் நான்கு சித்திரை வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனா். தெப்பத்திருவிழாவையொட்டி ஜனவரி 22-ஆம் தேதி திருஞானசம்பந்தா் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், ஜனவரி 24- ஆம் தேதி மச்சகந்தியாா் திருமணக்காட்சியும், ஜனவரி 25- ஆம் தேதி சப்தாவா்ண சப்பரத்தில் வீதியுலாவும், 26-ஆம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதலும், 27-ஆம் தேதி கதிரறுப்புத் திருவிழாவும், 28-ஆம் தேதி மைய நிகழ்ச்சியான தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி காலையில் இருமுறையும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெற்று மீண்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் சுற்றி வருதல் நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து தெப்பக்குளம் எழுந்தருளி தெப்ப உற்சவத்தில் பங்கேற்று இரவு கோயிலுக்கு திரும்பும் வரை அன்றைய தினம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.